Tuesday, September 01, 2015

அன்பே காதல் கொள்
என்னை கொள்ளாதே
சுகங்களை அறி ஆனால்
அளந்து கொள்ளாதே-
ஆணிவேரோடு பிடுங்கி 
 காதலை உன் காலடியில் 
நாட்டுவிட்டேன் 
காதல் கொள் கொள்ளாதே
தவனையிட்டு காதல் கொள்ளாதே
சுடும் பனி தலையில் விழுவதுபோல்
இதயம் வலிக்கிறது
காலவரை அற்ற விசா கொடு
என் காதலை கொள்ளாதே...
பார்க்கவில்லை விழிகள்
தொலைவில்  நீ..இதயம் 
இடம்மாறிக்கெண்டது.
என் செய்ய என் உயிரே
நீ..மட்டும் வேண்டும்
வழி சொல் வலி தாராதே.
வா....வானம்தாண்டி செல்வோம்
உன் பார்வை உன் நேசம் 
உன் காதல் உன் வாழ்கை
எல்லாம் நானக மாற வரம் கிடப்பேன்
வா...
என் பெயரை அழைக்கின்றாய்
உன் அருகில் இருப்பது போல்
உணர்கிறேன்
ஜயோ..என்னை கொள்ளாதே
காதல் கொள் 
நீ..அழகா? இல்லை நல்லவனா?
என தெரியாது புரியாது
ஆனால் வேண்டும்நீ...
வா...காதல் செய்வோம்
வா வாழ்வை தொடர்வோம்
 வா என் உயிரே வா.

https://www.youtube.com/watch?v=IEpxyDgj-Ys&feature=share

2 comments:

செம செமா said...

அருமை..

rahini said...

nanri sako