Thursday, November 17, 2005

என்னை தொந்தரவு செய்யாதே..




என்னை தொந்தரவு செய்யாதே.
---------------------------------------
என் புன்னகை கேட்டு நீ..
உன் மனதை தொலைத்ததுக்கு..

நான் காரணமாய் இருக்க முடியுமா..?

என்னை உன்னிடம்
தொலைத்துவிட்டேன்

என்று தொந்தரவு
செய்யாதே..
அமைதியுடன் இருந்த என்
இதயக்கடலில்...
உன்
புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்

என் மனதை கொந்தளிக்கவைத்தது

என்று சொல்லி...

என்னைதொந்தரவு செய்யாதே.

என் புன்னகை..என்னுள் பிறப்போடு
வந்த....
புன்னகைப்பூக்கள்
என்று சொல்லியும்
நீ..உன் மனதை..
தொலைத்துவிட்டேன்
என்றுதொந்தரவுசெய்யாதே.


.நீ..பார்த்தாய் நானும் பார்த்தேன்.
அதற்கு.உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.

மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.


நீ..புதியவனானது..என்னால்..
மனிதனாகியது...என்னால்.
உன் பேனை தினம்
கவிதை தொடுப்பது..என்னால்
உன் மனதில் புத்துணர்ச்சி
தோண்றியது
என்னால்என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...என் மனதில்
உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.
------------
rahini








Monday, November 14, 2005

இசையால் வசமானாள்



மனதுக்குப் பிடித்ததால்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
மூச்சும் உனக்கு தெரிவதில்லை.
எங்கே..செல்வது என்று.

அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.

கண்மூடிக்கிடந்தாலும்
என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
விழிக்க மறுக்கின்றது.

உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்


தெலைக்கட்ச்சியில் மாலை நேரம் தாலாட்டு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தீடிரென மேலே இருக்கும் கவிதை வாசிக்கப்பட்டது.
வாசித்து முடிந்ததும் றாஜ றாஜ சோழன் நான் எனை ....என்ற பாடல் போடப்பட்டது..
இந்தகவிதையை சிந்தித்து எழுதியவர்
யார் என்பதை சொல்லாத காரணம் என்ன..? கவிதை என்பது ஒரு உயிருக்கு சமம்.
அதை எடுத்தால் பெயரையும் சொல்லும் போது எழுத்தாளர்களுக்கு மனதில் சந்தோசம் மலர்ந்து இன்னும் எழுதத தூண்டும்.

ஆகவே என்கவிதைகளை எடுத்து தாலாட்டு நிகழ்ச்சியில் இனைத்தால் பெயரை செல்லுங்கள்.