Thursday, November 17, 2005
என்னை தொந்தரவு செய்யாதே..
என்னை தொந்தரவு செய்யாதே.
---------------------------------------
என் புன்னகை கேட்டு நீ..
உன் மனதை தொலைத்ததுக்கு..
நான் காரணமாய் இருக்க முடியுமா..?
என்னை உன்னிடம்
தொலைத்துவிட்டேன்
என்று தொந்தரவுசெய்யாதே..
அமைதியுடன் இருந்த என் இதயக்கடலில்...
உன் புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்
என் மனதை கொந்தளிக்கவைத்தது
என்று சொல்லி...
என்னைதொந்தரவு செய்யாதே.
என் புன்னகை..என்னுள் பிறப்போடு வந்த....
புன்னகைப்பூக்கள் என்று சொல்லியும்
நீ..உன் மனதை.. தொலைத்துவிட்டேன்
என்றுதொந்தரவுசெய்யாதே.
.நீ..பார்த்தாய் நானும் பார்த்தேன்.
அதற்கு.உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.
மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.
நீ..புதியவனானது..என்னால்..
மனிதனாகியது...என்னால்.
உன் பேனை தினம்
கவிதை தொடுப்பது..என்னால்
உன் மனதில் புத்துணர்ச்சி
தோண்றியது
என்னால்என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...என் மனதில்
உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.
------------
rahini
Monday, November 14, 2005
இசையால் வசமானாள்
மனதுக்குப் பிடித்ததால்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
மூச்சும் உனக்கு தெரிவதில்லை.
எங்கே..செல்வது என்று.
அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.
எங்கே..செல்வது என்று.
அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.
கண்மூடிக்கிடந்தாலும்
என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
விழிக்க மறுக்கின்றது.
உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்
உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்
தெலைக்கட்ச்சியில் மாலை நேரம் தாலாட்டு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன்.
தீடிரென மேலே இருக்கும் கவிதை வாசிக்கப்பட்டது.
வாசித்து முடிந்ததும் றாஜ றாஜ சோழன் நான் எனை ....என்ற பாடல் போடப்பட்டது..
இந்தகவிதையை சிந்தித்து எழுதியவர்
யார் என்பதை சொல்லாத காரணம் என்ன..? கவிதை என்பது ஒரு உயிருக்கு சமம்.
அதை எடுத்தால் பெயரையும் சொல்லும் போது எழுத்தாளர்களுக்கு மனதில் சந்தோசம் மலர்ந்து இன்னும் எழுதத தூண்டும்.
ஆகவே என்கவிதைகளை எடுத்து தாலாட்டு நிகழ்ச்சியில் இனைத்தால் பெயரை செல்லுங்கள்.
Thursday, October 20, 2005
உறவுக்கு உரிமை
என்னை பிரிந்து. விண்ணுலகம் சென்ற என் பெற்றோர்
உறவுக்கு உரிமை
உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..
நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-
என்பதால்....
அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini
உறவுக்கு உரிமை
உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..
நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-
என்பதால்....
அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini
Friday, October 14, 2005
தீபாவளி இரண்டில் உன் முகம்
தீபாவளி இரண்டில் உன் முகம்
என்னை...எண்ணையாக்கி
தினம் தினம். நான் தீபம்
ஏற்றுகின்றேன்
ஏன் தெரியுமா....?
அதில் உன் முகம் தெரிவதை
காண்பதற்கே...
என்னை விட உன் நலம் விரும்பி
என்னை எண்ணையாக்கிக் கொண்டு
இருக்கின்றேன்
நான் வாழ்வதை விட
உன் வாழ்வில் இன்பம் காண
ஆசை கொண்டேன்
அதனால் தான் என்னை
எண்ணையாக்க விரும்பினே;
---
நான் இப்போ.. அதிகமாக...
கடிகாரம் பார்க்கின்றேன்
காரணம்...
உன் வரவை எதிர் பார்த்து
ஆனால் நீ.. என்னை
ஏமாற்றிய நேரங்களைத்தான் கடிகாரம்
எனக்கு காட்டுகிண்றது
செல்லமே..
இந்தத் தீபாவளியோடாவது
நீ...என்னை...முழுப் பவுர்ணமியாக்கிவிடு.
அன்பே..
வானத்தில் இருக்கும் நிலவு
தேயற்றும்
ஆனால் நிலவாக உன் இதயத்தில்
இருந்துஒளி வீசும் என்னை தேய விடாதே...
இதுவே.. நீ..எனக்கு தீபாவளிக்குத் தரும்
புதிய ஆடை.என நான்
நினைத்துக்கொள்வோன்.
rahini
Wednesday, September 28, 2005
காதலர் தினம்...05
காதலர் தினம்...05
உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்.
மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.
உன் பேச்சும் உன் சிரிப்பம்
உன் குறும்பும்கேட்டபோது
என் மனம் கெஞ்சியது
உன் முகம் கான...
இதுவரை..யாரையும் விரும்பாமல்
இருந்தேன்.
இதயத்தின் கதவை இறுகப் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தே..வந்தாய்.....
எனை அழைத்தாய் எனை கவர்ந்தாய்
என் இதயப் பூட்டைஉடைத்து
எனக்குள் காதலை வளர்த்தாய்
நம்காதலுக்கு காதலர்தினத்தில்
முத்திரை பதிக்கின்றேன்
நித்திரையின்றி.
அன்பே..காலை எழுந்து தபாலை எதிர்பார்க்கின்றேன்
உன் காதலர்தின பரிசுக்காய்.
rahini.germany
Tuesday, September 27, 2005
என் உயிர்
Wednesday, September 07, 2005
முகம் காட்டு
முகம் காட்டு
வெள்ளி நிலவே முகம் காட்டு
வீசும் தென்றலே நான் சேர.....
வழி சொல்லு.
என் விழிகள் உனை தேடும்போது....
சில நிமிடம் தடைபோடுகின்றது
எனதுள்ளம்.
வஞ்சமில்லா நெஞ்சை ஊமை
மொழிபேச வைத்தபோது...
என் கண்கள் தடை இன்றி
நீர் பெருகின்றது.
இறைவணிடம் உயிரைக்கொடுக்க
முயன்றேன்
மறுகணம் உன் உயிருடன் கலக்க
ஏங்குகின்றேன்
உன் இதழின் அழகை சிரிப்பில்
கண்டேன்
உன் பெயரை ஏட்டினில்
எழிதிக்கொண்டேன்
விழிகள் மூட மறுக்கின்றது
உன் நினைவு பசியை
மறைக்கின்றது
ஓடும் நதியல் உன் முகம்
பார்த்தேன்
அள்ளிப்பருகையில் நீ.....தவறியது
ஏனோ.....?
உனை இதயத்தில் சுமந்ததால்....
நான் வறண்டகுளத்தில்
வாடியதாமரை யானேன்
நீ பக்கம் வந்தால் போதும்
உனக்கு நான் செந்தாமரையாவேன்
rakini..
தாய்
தாய்
தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை எடுத்தாள்.
மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை
பாலாக்கினாள்.
இரவுகலை பகலாக்கி முத்துப்போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும;
தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.
உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள் அப்போ……
புரியும் தாய்ப்பாசம்.
தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை எடுத்தாள்.
மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை
பாலாக்கினாள்.
இரவுகலை பகலாக்கி முத்துப்போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும;
தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.
உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள் அப்போ……
புரியும் தாய்ப்பாசம்.
என் அருகில் வாராயோ
என் அருகில் வாராயோ...
அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.
இதயத்தை உன்னிடம் கொடுத்த போது
தினம் கனவிலும் உனை தேடுனேன்.
அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.
உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்
இதயம் கால்களை நிறுத்துதடி
இருவிழியும் உனை பார்க்கும் போது
உன் உயிருடன் கலக்க விரும்புதடி.
எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.
அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.
இதயத்தை உன்னிடம் கொடுத்த போது
தினம் கனவிலும் உனை தேடுனேன்.
அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.
உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்
இதயம் கால்களை நிறுத்துதடி
இருவிழியும் உனை பார்க்கும் போது
உன் உயிருடன் கலக்க விரும்புதடி.
எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.
மீண்டும் தேடும் சுகம்
மீண்டும் தேடும் சுகம்
முற்றத்து மல்லிகையின்மூக்கைத் துழைக்கும் வாசனை
மண்ணில் என் பிஞ்சுக் காலின் சின்னச் சுவடுகள்
தத்தி நடக்கையில் சலங்கையின் சத்தங்கள்
சின்னக் குரலால் சங்கீத ஸ்வரங்கள்
நந்தவனத்துக்குள் சலனமில்லா மனங்கள்
அன்னையின் மடியில் சுதந்திரத் தூக்கம்
தந்தையின் கரத்தால் செல்ல அடிகள்
தூரத்தில் மணி ஓசை கேட்டிட
ஐஸ் பழத்துக்காய் அடம் பிடிக்கும் வயது.
ஐம்பது சதத்திற்க்காய் அப்பாவின் கையில் செல்ல முத்தம்.
சண்டை பிடித்து உணவு உண்ண அண்ணாவைத் தேடும் விழிகள்
அம்மாவின் பேச்சோடுசைக்கில் சுற்றுலா....
பள்ளிப் பருவத்தில்துள்ளித் திரிந்த காலங்கள்
புத்தகத்தின் நடுவினில் குட்டி போடும் மயிலிறகு.
புயலோடு விழுந்த மரத்தில்களவாடும் புளியங்காய்.
வயிற்றுக்குள் வலி தேடி கள்ளம் போடும் நாளில்உள்ளங்கை சிவக்க வைக்கும்வாத்தியாரின் பிரம்பு.
பிரியாவிடை கொடுத்துவிடைபெறும் பள்ளிக் கூடத்தில்கண்ணீர்த் துளியுடன் கைகாட்டும் நண்பர்கள்
இத்தனையும் தேடும் போது நெஞ்சுக்குள் ஓர் சுகம்
சுகத்துக்குள் ஓர் சோகம்..
எனக்குள் ஓர் முகம்
எனக்குள் ஓர் முகம்
நீயும் நானும் பேசும் போது
மனதில் இன்ப ஊஞ்சல் கண்டேன்.
நீயும் நானும் சந்தித்தபோது
உள்ளத்தில் ஓர் உணர்வு கண்டேன்.
நீ..சொல்லும் வேதம் கேட்டு
உன்னுள் ஓர் ஆசை கொண்டேன்.
நீ..நடந்த பாதை எல்லாம்
பூச்செடிகள் நட்டுவைத்தேன்.
நீ.....குளித்த நீர் எடுத்து பூச்செடியை
பூக்க வைத்தேன்.
அதில் உன் முகம் பார்த்தபோது
வண்டு உனை தீண்டாமல் வலை
போட்டு மூடிவைத்தேன்.
உதிர்ந்துள்ள பூக்களில் அடிவைத்து
நடக்கையில்அதில் பொற்க்காலம்
ஒன்றைக்கண்டேன்.
உன் மனதை நோகாது நான் காக்க
என் மனதை கல்லாக்கிக்கொண்டேன்.
கண்ணிர்த்துளியோடு என்
ஆசையையும் புதைத்து விட்டு...
உன் முகம் மட்டும்போதும் போதும்
என ஓரமாய் ஒதுங்கி விட்டன்.
------ ------ ------
ராகினியின் மேலும் பல கவிதைகளைப் படிக்க கீழ்வரும் தலைப்புகளில் சொடுக்குங்கள்.
1.ராகினியின் கவிதை முத்துக்கள்.
------ ------ -------
தொடுப்புகள் [ LINKS ]
யாழ் கவி
தமிழ் மணம்
இலங்கை வானொலி நினைவலைகள்
நிலா எப்.எம்
Subscribe to:
Posts (Atom)