Wednesday, September 07, 2005

முகம் காட்டு


முகம் காட்டு



வெள்ளி நிலவே முகம் காட்டு

வீசும் தென்றலே நான் சேர.....

வழி சொல்லு.


என் விழிகள் உனை தேடும்போது....

சில நிமிடம் தடைபோடுகின்றது

எனதுள்ளம்.


வஞ்சமில்லா நெஞ்சை ஊமை
மொழிபேச வைத்தபோது...

என் கண்கள் தடை இன்றி

நீர் பெருகின்றது.


இறைவணிடம் உயிரைக்கொடுக்க

முயன்றேன்
மறுகணம் உன் உயிருடன் கலக்க

ஏங்குகின்றேன்

உன் இதழின் அழகை சிரிப்பில்

கண்டேன்

உன் பெயரை ஏட்டினில்

எழிதிக்கொண்டேன்

விழிகள் மூட மறுக்கின்றது

உன் நினைவு பசியை

மறைக்கின்றது

ஓடும் நதியல் உன் முகம்

பார்த்தேன்

அள்ளிப்பருகையில் நீ.....தவறியது

ஏனோ.....?

உனை இதயத்தில் சுமந்ததால்....

நான் வறண்டகுளத்தில்

வாடியதாமரை யானேன்

நீ பக்கம் வந்தால் போதும்

உனக்கு நான் செந்தாமரையாவேன்

rakini..

1 comment:

rahini said...

அன்புள்ள ராகினி அவர்களுக்கு...

தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.

காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.

அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...

அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87