
எனக்குள் ஓர் முகம்
நீயும் நானும் பேசும் போது
மனதில் இன்ப ஊஞ்சல் கண்டேன்.
நீயும் நானும் சந்தித்தபோது
உள்ளத்தில் ஓர் உணர்வு கண்டேன்.
நீ..சொல்லும் வேதம் கேட்டு
உன்னுள் ஓர் ஆசை கொண்டேன்.
நீ..நடந்த பாதை எல்லாம்
பூச்செடிகள் நட்டுவைத்தேன்.
நீ.....குளித்த நீர் எடுத்து பூச்செடியை
பூக்க வைத்தேன்.
அதில் உன் முகம் பார்த்தபோது
வண்டு உனை தீண்டாமல் வலை
போட்டு மூடிவைத்தேன்.
உதிர்ந்துள்ள பூக்களில் அடிவைத்து
நடக்கையில்அதில் பொற்க்காலம்
ஒன்றைக்கண்டேன்.
உன் மனதை நோகாது நான் காக்க
என் மனதை கல்லாக்கிக்கொண்டேன்.
கண்ணிர்த்துளியோடு என்
ஆசையையும் புதைத்து விட்டு...
உன் முகம் மட்டும்போதும் போதும்
என ஓரமாய் ஒதுங்கி விட்டன்.
------ ------ ------
ராகினியின் மேலும் பல கவிதைகளைப் படிக்க கீழ்வரும் தலைப்புகளில் சொடுக்குங்கள்.
1.ராகினியின் கவிதை முத்துக்கள்.
------ ------ -------
தொடுப்புகள் [ LINKS ]
யாழ் கவி
தமிழ் மணம்
இலங்கை வானொலி நினைவலைகள்
நிலா எப்.எம்
1 comment:
அன்புள்ள ராகினி அவர்களுக்கு...
தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.
காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.
அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...
அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87
Post a Comment