Wednesday, March 01, 2006

காதல் தினம். 14 .2 11


காதல் தினம். 14 .2 12
------------------
இருந்தேன்
தனிமையில் சிறையில் சிலகாலமாய்
வாழ்ந்தேன்
என்னை நான் தேடிக்கொள்ளும் போது
எங்கோ இருந்து என்னை அழைத்தாய்
யார் நீ....?
உன் பெயர் என்ன ?
உனது ஊர் எது ?
என்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்
என் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி
உனது இதயத்தில் பூட்டிக்கொண்டாய்.
அந்த நிமிடப்பொழுதில்
எனக்கும் தெரியாமல்.
மெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்
உனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு!
எனக்குள் போறாட்டதை எழுப்பி!
என்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்!
புடவைக்கடைக்குள் நின்றுதிக்குமுக்காடினேன்"
அந்த நிமடத்தில்""""என்னை உனக்கே அர்பணித்தேன்
மனதால்
உன்னிடம் சொல்லாமல்
காதல் பரீச்சையில் தோற்றுவிடுவேனா:.
என்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.
யார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்!
வொதும்பி துடித்தேன்!
விழிகள் தேடத்தொடங்கியது
உதடுகள் பேசத்தயங்கியது
காதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்
ஏழாம் அறிவாக.
நீயும் தயங்கினாய்...நானும் தயங்கினேன்-
இருவரும் முடிவின்றி தயங்கும்போது...
நானே உன்னிடம் கூறமுற்பட்டேன்
முடியவில்லை!
உன்னை பிரியும் சில மணிநேரத்தை
கண்டு கண்டு வொதும்பி
அழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.
சொன்ன நிமிடத்தில் இருந்தே
என் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு
என சொல்லி விடைபெற்றேன்
சிறகொடிந்த பறவைபோல்
திசைமாறி பயணித்தேன்
பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
புழுவாக துடித்தேன்.
பார்வையிடும் விழிகள் நான்கும்
கண்ணீரில் மதிக்கும் நேரம்
கரைந்தோடும் கண்ணீiரை
வாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;
தேடுகின்றேன் உன்னை மட்டும்
நேசிக்கின்றேன் உன்னைமட்டும்
சுவாசிக்கின்றேன் உன்னை மட்டும்
முதல்வசந்தம்
முதல் முத்தம்
முதல் வார்த்தை
முதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு
காலத்தை கடந்து செல்லாதே
நேரத்தை மறந்து செல்லாதே
நாற்களை விழத்தி செல்லாதே
இதுவரை நீ இருந்த திசை மறந்து
இனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்
உன்னை என்னி வழும் என்னை
மறந்துவிடாதே
உன்கையில் என்னை எடுக்கும் வரை
மறந்து தூங்கிவிடாதே
நேசத்தை தெழிவு படுத்த
காதலளர் தினம் தேவையில்லை
நம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்
போதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.
காதல் தினம். 14 -2-11

என்உயிராணவனே!
என் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே
என்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.

அந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்
அலை அலையாய் கரைசேர..
வெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட
இரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய
பரந்த வெளியில் கால்கள் நடமிட
பூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்
உன்முகம் தெரிந்தது.

திகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி
மீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.
உனது விழியும் எனது விழியும்
பார்வையிடும் நொடிப்பொழுதில்!!!!
நீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...
கரைந்து கொண்டோம்.
அந்தநொடிப்பொழுதில் உன்னையும் என்னையும்...
அறியாது நமக்குள்ளே காதல்..உருவானது.

மொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட
ஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.
நீபாதி நான்பாதியாக!
சொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள!
இருவிழியும் உற்று நோக்கையில்..
மனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்!!

காதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்
நினைத்துபார்க்கும் பொழுது மழையே..
இல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..
என் இதயம் பிளக்க கண்டேன்!!!!!

ரசித்துவாழ காதல் வேண்டும்
இணைந்து வாழ...நீ வேண்டும்...
என்பதால்
உன்னை கைபற்றிக்கொண்டேன்..
இன்றுபோல்..என்றும் உன்னோடு
இனைந்திருப்பேன்.





காதல் தினம். 14 -2-10
-------------

காதல் என்றும் சுகமாக
..
நினைவுகளும் கனவுகளும்
இன்பமாக
...
புதிய பூமியில் புதிதாக..
பிறந்ததுபோல்

பிறக்கும் இரவெல்லாம்

தொலையும் தூக்கம்
விண்ணில் பிறக்கும்

உணர்வுகள் தொட
...
வாழ்வில் இன்பம்
அலையாய் வந்திட
..
சுமைகளை மாறி
சுமக்கும் போது

சுகமாய் கால்கள்
நடந்திடும் பாதையில்.

வறண்ட பூமியில்
பச்சை
புல் முளைத்திட..
இரு உயிரும் ஒன்றாய் ..
இணைந்து

புதிய பூமியில்
..
புதிதாய் ஒரு ஜனனம்
பிறந்திட
...
காலம் கடந்ததும்
சண்டைகள் மோதிக்கொள்ள

வருடத்தில் ஒருநாள்
இன்பமாய் வாழ..
வழி விட்டுக் கொடுக்கின்றது
காதல் தினம்.
------------------

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.

காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.

ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்


சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

ராகினி
ஜேர்மன்

23 comments:

முத்தமிழ் said...

ராகினி அவர்களே,

இன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு வலைப்பதிவுகளை பராமரிக்கிறீர்கள்?

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

முத்தமிழ்மன்றத்திற்கும் வருகை தாருங்கள்.

www.muthamilmantram.com

Chandravathanaa said...

nallayirikkirathu kavithai

rahini said...

nanri Chandravathanaa
ungkal varavuku.

rahini

Anonymous said...

எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

U.P.Tharsan said...

சொந்தகாரர் போலும். இத்தனை வலைப்பூவை கட்டிக்காக்கிறீர்களே. இது எல்லாம் தனிக் கலையப்பா! சந்திரவதனா அக்காபோல் சாதனைப்பெண்கள் பதிவில் உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கச்சொல்லி கேளுங்கள். :-))

rahini said...

கண்டிப்பா.. இடம் கிடைத்தால் பார்க்கலாம்.

Unknown said...

என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

என்னை ஈர்த்த வரிகள் இவை.......

Unknown said...

உங்கள் கவிதைப்பக்கம் மிகவும் அழகானகவிதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள்
அன்புடன்
இலக்கியன்

rahini said...

நன்றி உங்கள் வருகைக்கு
இலக்கியன்.
அன்புடன்
ராகினி.

rahini said...

narikal ungkal anpukku

N Suresh said...

அன்புள்ள ராகினி,

இந்த கவிதை யாருக்காக பாடுகிறீர்கள் என்று சொல்லாமல் இருப்பதால் பலர் இது ஒரு காதலனை நினைத்து பாடுவதாக எண்ணலாம். சிலர் ஒரு குழந்தையை நினைத்து உருகுவது போல் கூட எண்ணலாம்.

//என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.//

ஞாபகத்தின் தழும்புகள் என்று வாசகன் நான் எண்ணிக்கொள்கிறேன்.

//காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது//

ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஓட்டமுள்ளது. ஆனால் கவிஞர்களே அதை உணருகிறார்கள்

//ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்//

உண்மை பாசத்தின் தொடர்ச்சி என்ற நிஜத்தின் துடிப்பு.


//சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?//

நினைவுகள் தரும் படம்
சொல்லும் வார்த்தைகளா இவை?

//உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.//

துக்கத்தின் முடிவில் துக்கமே
ஒரு சுகமாகும் நிலையிது!

//என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.//

மழை நீரின் வருகையில்
இடைவெளி உண்டு
அதன்வழியே பயணிக்கும்
திறமையுண்டாம்
நாம் வெறுக்கும் கொசுவிற்கு!

//எப்பவும் எனக்கு சாலிக்காத..//

சாலிக்காத - என்பதில் எழுத்துப்பிழை உள்ளது போல் தெரிகிறது. அது
" சலிக்காத" என்பது சரி என்று உங்களுக்கு தோன்றினால், திருத்தலாம்.

//பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.//

இந்த கவிதையின் தணல் குளிர்ந்திட என் இனிய வாழ்த்துக்கள்.

பாசமுடன்
என் சுரேஷ்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் கவிதை வண்ணத்துப்பூச்சியாக உலகெலாம் சிரகடிக்கட்டும்! அருமை!

அன்புடன்,
ஜோதிபாரதி

தினேஷ் said...

நல்ல கவிதை...

தினேஷ்

rahini said...

nanri ungkal varukaikku

தமிழ் மதுரம் said...

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.//


நல்ல முயற்சி. தொடருங்கள். கவிதை கேட்கையில் இனிமையாகவும் படிக்கையில் அருமையாகவும் உள்ளது,

rahini said...

nanri ungka varavukku

இது என் சங்கப்பலகை said...

வருடும் வார்த்தைகள்..
ஒப்பனையில்லா..உணர்வுகள்..
யதார்த்த ரசம் பூசிய
வாழ்கையின் கண்ணாடிவழி
பிரதிபலிக்கிறது..
உன் கவிபிம்பம்.
மீட்டலின் கட்டுக்குள்
உருகும்..
வீணையின் நரம்புகள் உதிர்க்கும்
நாத குழைவுகளாய்
நடமிடுகிறது..
உன் தமிழ்..!
தாளமிசைத்து ஓடும்
நதியின்..
கண்ணுக்கு தெரியாத
கொலுசுகளின்..
சங்கீத அதிர்வுகளாய்
உன் சொல்லாடல்களின்
பின் புலத்தில்..
இசையின் ராஜாங்கம்.
பசிக்கும் மனங்களுக்கு
படைப்புகளால்..
படையிலிடும்..
கவிதாயினியின்
தமிழ் தொடரட்டும்..

அறிவியல் பார்வை said...

‌க‌விதைக‌ள் அருமை...


உங்க‌ள் ப‌திவுக்கு நான் புதிய‌ வ‌ர‌வு...

rahini said...

ungkal varavukku nari

Anonymous said...

உங்கள் கொஞ்சும் குரலில் கவிதை கேட்க வேண்டும் படிப்பதை விட அதில் தான் இனிமை.. வாழ்த்துக்கள்.

rahini said...

நன்றி கேழுங்கள் கேழுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்.

மயாதி said...

நல்லது....
பெண்மையின் உணர்வுகளைக்கூட புரிந்துகொள்ள முடிகிறது
இப்போதுதான் நண்பி....

Information said...

Good blog.