Tuesday, September 01, 2015

அன்பே காதல் கொள்
என்னை கொள்ளாதே
சுகங்களை அறி ஆனால்
அளந்து கொள்ளாதே-
ஆணிவேரோடு பிடுங்கி 
 காதலை உன் காலடியில் 
நாட்டுவிட்டேன் 
காதல் கொள் கொள்ளாதே
தவனையிட்டு காதல் கொள்ளாதே
சுடும் பனி தலையில் விழுவதுபோல்
இதயம் வலிக்கிறது
காலவரை அற்ற விசா கொடு
என் காதலை கொள்ளாதே...
பார்க்கவில்லை விழிகள்
தொலைவில்  நீ..இதயம் 
இடம்மாறிக்கெண்டது.
என் செய்ய என் உயிரே
நீ..மட்டும் வேண்டும்
வழி சொல் வலி தாராதே.
வா....வானம்தாண்டி செல்வோம்
உன் பார்வை உன் நேசம் 
உன் காதல் உன் வாழ்கை
எல்லாம் நானக மாற வரம் கிடப்பேன்
வா...
என் பெயரை அழைக்கின்றாய்
உன் அருகில் இருப்பது போல்
உணர்கிறேன்
ஜயோ..என்னை கொள்ளாதே
காதல் கொள் 
நீ..அழகா? இல்லை நல்லவனா?
என தெரியாது புரியாது
ஆனால் வேண்டும்நீ...
வா...காதல் செய்வோம்
வா வாழ்வை தொடர்வோம்
 வா என் உயிரே வா.

https://www.youtube.com/watch?v=IEpxyDgj-Ys&feature=share

Saturday, September 14, 2013

ஜரோப்பிய தமிழ் வானொலியில் இடம்பெறும் என் நிகழ்சிகள்

மதியம் 12..முதல் 01 வரை இசையின்மடியில் மதியம் 1.30 முதல்...3.00 மணிவரை பூந்தெண்றல் (புதியபாடல்களுக்கு கவிதை இணைத்து தொகுத்து வழங்குவது) இரவு 11...முதல் 12 மணிவரை இரவின் துயில் கேட்டு மகிழ இங்கே...ETR மற்றும் இங்கேIsaiyin Mdiyil and Iravin Thuyil -

Thursday, October 15, 2009

தேன் மதுரக்குரலோன் டி.எம்சௌந்தர்ராஜன்பிறந்தநாள்அன்றுநான்அவரோடுபேசிமகிழ்ந்த
சிலநிமடத்தைஉங்களோடுபாகிந்துகொள்கின்றேன்
கேட்டுமகிழஇங்கேசெல்லவும்.
https://archive.org/details/Isaiyin-Mdiyil

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி எம் சௌந்தராஜன்அவரின் பிறந்தநாளைமுன்னிட்டு இன்று
24-3-11

ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் சிறப்புநிகழ்சி தொகுத்து வளங்கினேன்...கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.டி எம் சௌந்தராஜன்https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

கனவுகள்சிதைந்தன
என்ற தலைப்பில்.என்சிறுகதை..புத்தக வடிவில் இங்கே...வொளியாகியுள்ளது படித்து மகிழவும். 72 பக்கத்தில்சென்று பார்வையிடவும்

http://kaatruveli-ithazh.blogspot.com/


தென்இந்தியா-நடிகை ஜெயலலிதை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கா
ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில்
நான் தொகுத்துவளங்கி நிகழ்ச்சி அவர் பாடிய பாடல்களும் அவர் நடித்த படங்களில். இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் கேட்க இங்கே.....ஜெயலலிதை
---------------------

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்.மலேசியாவாசுதேவன்




ஜரோப்பியத்தமிழ் வானொலியின் ஏழாவது அகவையில் கால் பதித்ததினம். அறிவிப்பாளர்கள் யாவரும் இப்படத்தில்.மிகுதி படத்தை பார்வையிட.இங்கே செல்லவும்.http://www.tamilfm.eu/ETR

Thursday, April 30, 2009

எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்மலேசியாவாசுதேவன்




எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் new 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(new)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 12 முதல்1 வரை கேட்டு மகிழவும்.




Tuesday, June 06, 2006

ராகினியின் கவிதைப் பூங்கா.


என் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.எண்னங்களை சிறகு விரித்து
தமிழைத் தேன் போல் சுவைக்கும்..
போது
அந்த தமிழை கவி தொடுத்து

இந்தக் கவிதைப் பூங்காவில்
உங்கள் முன் மலரவிடுகின்றேன்.
அன்புடன்ராகினி
ஜேர்மன;


ttp://makimai.blogspot.com/

kavithaikuyil@gmail.com

தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்போம்
வணக்கம் தமிழ் தமிழ் மண்ணே வணக்கம்
வந்தோரரை வாழ வைத்த தமிழ் மண்னை 
உயிராய் நேசிப்போம்...

புலம் பெயர்மண்னை நேசித்து நேசித்து
உடல் தளர்ந்து மடிந்து போவதை விட 
தயின் கருவறையில் இருந்து தொப்புள் கொடி...
அறுந்து முத்தமிட்ட மண்னை 
தழிழ் தாய் போல் உயிராய் நேசிப்போம்

சங்கம் முழங்க தமிழ் இசைக்க..
மண்னை வாழ்த்தி புகழ் பாட
தமிழன் என்றும் தொடர்ந்து கொண்டே இருப்பான்!
வேரோடு பிடுங்கி எறிந்தாலும்
ஆணிவேரில் இருந்து வளர்வான் தமிழன்
வேலண்மையை தொழிளாக கொண்டு உளுது வாழ்த மண்னை
தலை நிமிர்ந்து தெளிவாய் வாழ்த்தி பாடுவான் தமிழன் 
தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்பான் .

வந்தேறு குடியினர் நம் மண்ணை மிதித்தாலும் 
நம் தாய் மண்னை என்றும் உயிராய் நேசிப்போம்.

ஆலயம் சென்று நெற்றியில் குறியிட்டால் அது திருநீறு
சொந்த நாடு சென்று நெற்றியில் மண்ணை குறியிட்டால்
அது தாயின் கருவறை 

ஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதியாய் அலைந்து திரிந்தாலும்
பிறந்த மண் வாழவைக்கும் நம் பசியை போக்காட்டும் .

துருப்பிடித்த கப்பலில் பயணம் செய்தாலும்
துணிவோடு புறப்படுவோம் தமிழ் தாய் மண்னை உயிராய் நேசிக்க.


Wednesday, March 01, 2006

காதல் தினம். 14 .2 11


காதல் தினம். 14 .2 12
------------------
இருந்தேன்
தனிமையில் சிறையில் சிலகாலமாய்
வாழ்ந்தேன்
என்னை நான் தேடிக்கொள்ளும் போது
எங்கோ இருந்து என்னை அழைத்தாய்
யார் நீ....?
உன் பெயர் என்ன ?
உனது ஊர் எது ?
என்று நினைத்து கேள்வி தொடுப்பதற்குள்
என் அனுமதி இன்றி என் இதயத்தை திருடி
உனது இதயத்தில் பூட்டிக்கொண்டாய்.
அந்த நிமிடப்பொழுதில்
எனக்கும் தெரியாமல்.
மெல்ல மெல்ல நடக்க தொடங்கினேன்
உனது குரலை கேட்டு சிந்தனைகளை பறக்கவிட்டு!
எனக்குள் போறாட்டதை எழுப்பி!
என்னை நான் திரும்பி பார்த்தநொடிப்பொழுதில்!
புடவைக்கடைக்குள் நின்றுதிக்குமுக்காடினேன்"
அந்த நிமடத்தில்""""என்னை உனக்கே அர்பணித்தேன்
மனதால்
உன்னிடம் சொல்லாமல்
காதல் பரீச்சையில் தோற்றுவிடுவேனா:.
என்றபயத்தில் காதலை சொல்ல தயங்கினேன்.
யார் நீ.. என்று தெரியாமல் தவித்தேன்!
வொதும்பி துடித்தேன்!
விழிகள் தேடத்தொடங்கியது
உதடுகள் பேசத்தயங்கியது
காதல் பரீச்சையை உன்னிடம் விட்டேன்
ஏழாம் அறிவாக.
நீயும் தயங்கினாய்...நானும் தயங்கினேன்-
இருவரும் முடிவின்றி தயங்கும்போது...
நானே உன்னிடம் கூறமுற்பட்டேன்
முடியவில்லை!
உன்னை பிரியும் சில மணிநேரத்தை
கண்டு கண்டு வொதும்பி
அழத்தொடங்கும் நிமிடத்தில் என் காதலை சொன்னேன்.
சொன்ன நிமிடத்தில் இருந்தே
என் உடல் உயிர்அத்தனையும் உனது பொறுப்பு
என சொல்லி விடைபெற்றேன்
சிறகொடிந்த பறவைபோல்
திசைமாறி பயணித்தேன்
பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
புழுவாக துடித்தேன்.
பார்வையிடும் விழிகள் நான்கும்
கண்ணீரில் மதிக்கும் நேரம்
கரைந்தோடும் கண்ணீiரை
வாணத்தில் இருந்து மழையாக பொழிந்தேன் நீ..இருந்தகடற்கரையில்;
தேடுகின்றேன் உன்னை மட்டும்
நேசிக்கின்றேன் உன்னைமட்டும்
சுவாசிக்கின்றேன் உன்னை மட்டும்
முதல்வசந்தம்
முதல் முத்தம்
முதல் வார்த்தை
முதல் கவிதைஎல்லாமே நீ எனக்கு
காலத்தை கடந்து செல்லாதே
நேரத்தை மறந்து செல்லாதே
நாற்களை விழத்தி செல்லாதே
இதுவரை நீ இருந்த திசை மறந்து
இனி வரும் திசையை கண்டு மகிழ்வு அடைந்துகொள்
உன்னை என்னி வழும் என்னை
மறந்துவிடாதே
உன்கையில் என்னை எடுக்கும் வரை
மறந்து தூங்கிவிடாதே
நேசத்தை தெழிவு படுத்த
காதலளர் தினம் தேவையில்லை
நம் இருவர் மனமும் தெளிவாக இருந்தால்
போதும் நமக்கு தினம் தினம் காதலர் தினம் தான்.
காதல் தினம். 14 -2-11

என்உயிராணவனே!
என் இல்லத்தில் பதிந்தது உனது கால் மட்டுமே
என்உள்ளத்தில் பதிந்தது..உன் இதயம் ஒன்றே.

அந்த நிமிடத்தில் புதிவித கனவுகள்
அலை அலையாய் கரைசேர..
வெளிவரும் மூச்சு உன்னை சுற்றி வட்மிட
இரவுகள் எல்லாம் உறக்கம் தொலைய
பரந்த வெளியில் கால்கள் நடமிட
பூமியை தொடும் வாணத்தின் ஓரமாய்
உன்முகம் தெரிந்தது.

திகட்டாத இன்பத்தில் சுகங்களை முடிவின்றி
மீட்டிக்கொள்ள உன் துணை தேடினேன்.
உனது விழியும் எனது விழியும்
பார்வையிடும் நொடிப்பொழுதில்!!!!
நீயும் நானுமாய் ஒருவருக்குள் ஒருவாராக...
கரைந்து கொண்டோம்.
அந்தநொடிப்பொழுதில் உன்னையும் என்னையும்...
அறியாது நமக்குள்ளே காதல்..உருவானது.

மொழிகள் மௌனமாகி புதுவேதம் பிறந்திட
ஒருவருக்குள் ஒருவாராக இடம் மாறிக்கொண்டோம்.
நீபாதி நான்பாதியாக!
சொல்லத்துடிக்கும் உணர்வுகளை உதடு தடுத்துக்கொள்ள!
இருவிழியும் உற்று நோக்கையில்..
மனம் என்ற மணமேடையில் உற்காரத்துடித்தோம்!!

காதல் இல்லாத வாழ்வுதனையும் நீ..இல்லாத வாழ்வுதனையும்
நினைத்துபார்க்கும் பொழுது மழையே..
இல்லாத வறண்டபூமி பிளந்தது போல்..
என் இதயம் பிளக்க கண்டேன்!!!!!

ரசித்துவாழ காதல் வேண்டும்
இணைந்து வாழ...நீ வேண்டும்...
என்பதால்
உன்னை கைபற்றிக்கொண்டேன்..
இன்றுபோல்..என்றும் உன்னோடு
இனைந்திருப்பேன்.





காதல் தினம். 14 -2-10
-------------

காதல் என்றும் சுகமாக
..
நினைவுகளும் கனவுகளும்
இன்பமாக
...
புதிய பூமியில் புதிதாக..
பிறந்ததுபோல்

பிறக்கும் இரவெல்லாம்

தொலையும் தூக்கம்
விண்ணில் பிறக்கும்

உணர்வுகள் தொட
...
வாழ்வில் இன்பம்
அலையாய் வந்திட
..
சுமைகளை மாறி
சுமக்கும் போது

சுகமாய் கால்கள்
நடந்திடும் பாதையில்.

வறண்ட பூமியில்
பச்சை
புல் முளைத்திட..
இரு உயிரும் ஒன்றாய் ..
இணைந்து

புதிய பூமியில்
..
புதிதாய் ஒரு ஜனனம்
பிறந்திட
...
காலம் கடந்ததும்
சண்டைகள் மோதிக்கொள்ள

வருடத்தில் ஒருநாள்
இன்பமாய் வாழ..
வழி விட்டுக் கொடுக்கின்றது
காதல் தினம்.
------------------

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.

காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.

ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்


சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

ராகினி
ஜேர்மன்

Thursday, November 17, 2005

என்னை தொந்தரவு செய்யாதே..




என்னை தொந்தரவு செய்யாதே.
---------------------------------------
என் புன்னகை கேட்டு நீ..
உன் மனதை தொலைத்ததுக்கு..

நான் காரணமாய் இருக்க முடியுமா..?

என்னை உன்னிடம்
தொலைத்துவிட்டேன்

என்று தொந்தரவு
செய்யாதே..
அமைதியுடன் இருந்த என்
இதயக்கடலில்...
உன்
புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்

என் மனதை கொந்தளிக்கவைத்தது

என்று சொல்லி...

என்னைதொந்தரவு செய்யாதே.

என் புன்னகை..என்னுள் பிறப்போடு
வந்த....
புன்னகைப்பூக்கள்
என்று சொல்லியும்
நீ..உன் மனதை..
தொலைத்துவிட்டேன்
என்றுதொந்தரவுசெய்யாதே.


.நீ..பார்த்தாய் நானும் பார்த்தேன்.
அதற்கு.உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.

மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.


நீ..புதியவனானது..என்னால்..
மனிதனாகியது...என்னால்.
உன் பேனை தினம்
கவிதை தொடுப்பது..என்னால்
உன் மனதில் புத்துணர்ச்சி
தோண்றியது
என்னால்என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...என் மனதில்
உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.
------------
rahini








Monday, November 14, 2005

இசையால் வசமானாள்



மனதுக்குப் பிடித்ததால்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
மூச்சும் உனக்கு தெரிவதில்லை.
எங்கே..செல்வது என்று.

அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.

கண்மூடிக்கிடந்தாலும்
என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
விழிக்க மறுக்கின்றது.

உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்


தெலைக்கட்ச்சியில் மாலை நேரம் தாலாட்டு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தீடிரென மேலே இருக்கும் கவிதை வாசிக்கப்பட்டது.
வாசித்து முடிந்ததும் றாஜ றாஜ சோழன் நான் எனை ....என்ற பாடல் போடப்பட்டது..
இந்தகவிதையை சிந்தித்து எழுதியவர்
யார் என்பதை சொல்லாத காரணம் என்ன..? கவிதை என்பது ஒரு உயிருக்கு சமம்.
அதை எடுத்தால் பெயரையும் சொல்லும் போது எழுத்தாளர்களுக்கு மனதில் சந்தோசம் மலர்ந்து இன்னும் எழுதத தூண்டும்.

ஆகவே என்கவிதைகளை எடுத்து தாலாட்டு நிகழ்ச்சியில் இனைத்தால் பெயரை செல்லுங்கள்.

Thursday, October 20, 2005

உறவுக்கு உரிமை

என்னை பிரிந்து. விண்ணுலகம் சென்ற என் பெற்றோர்
உறவுக்கு உரிமை


உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..

நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-

என்பதால்....

அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini

Friday, October 14, 2005

தீபாவளி இரண்டில் உன் முகம்


தீபாவளி இரண்டில் உன் முகம்



என்னை...எண்ணையாக்கி
தினம் தினம். நான் தீபம்
ஏற்றுகின்றேன்
ஏன் தெரியுமா....?

அதில் உன் முகம் தெரிவதை
காண்பதற்கே...
என்னை விட உன் நலம் விரும்பி

என்னை எண்ணையாக்கிக் கொண்டு
இருக்கின்றேன்

நான் வாழ்வதை விட
உன் வாழ்வில் இன்பம் காண
ஆசை கொண்டேன்
அதனால் தான் என்னை

எண்ணையாக்க விரும்பினே;

---
நான் இப்போ.. அதிகமாக...
கடிகாரம் பார்க்கின்றேன்
காரணம்...
உன் வரவை எதிர் பார்த்து
ஆனால் நீ.. என்னை
ஏமாற்றிய நேரங்களைத்தான் கடிகாரம்
எனக்கு காட்டுகிண்றது

செல்லமே..
இந்தத் தீபாவளியோடாவது
நீ...என்னை...முழுப் பவுர்ணமியாக்கிவிடு.

அன்பே..
வானத்தில் இருக்கும் நிலவு
தேயற்றும்
ஆனால் நிலவாக உன் இதயத்தில்
இருந்துஒளி வீசும் என்னை தேய விடாதே...
இதுவே.. நீ..எனக்கு தீபாவளிக்குத் தரும்
புதிய ஆடை.என நான்
நினைத்துக்கொள்வோன்.

rahini

Wednesday, September 28, 2005

காதலர் தினம்...05


காதலர் தினம்...05

உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்.

மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.

உன் பேச்சும் உன் சிரிப்பம்
உன் குறும்பும்கேட்டபோது
என் மனம் கெஞ்சியது
உன் முகம் கான...
இதுவரை..யாரையும் விரும்பாமல்
இருந்தேன்.

இதயத்தின் கதவை இறுகப் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தே..வந்தாய்.....
எனை அழைத்தாய் எனை கவர்ந்தாய்
என் இதயப் பூட்டைஉடைத்து
எனக்குள் காதலை வளர்த்தாய்
நம்காதலுக்கு காதலர்தினத்தில்
முத்திரை பதிக்கின்றேன்
நித்திரையின்றி.

அன்பே..காலை எழுந்து தபாலை எதிர்பார்க்கின்றேன்
உன் காதலர்தின பரிசுக்காய்.

rahini.germany

Tuesday, September 27, 2005

என் உயிர்






என் உயிர்

உன் அன்பே.
என் வெளிச்சம்

உன் காதல்
எனக்கு காவல்

உன் பேச்சு..
எனக்கு..இன்பம்

உன் குரல்..
என் தேடல்

உன் நலம்.
என் நிம்மதி

உன் நிம்மதி.
என் சந்தோசம்

உன் உயிர்...
அது என் உயிர்.

ராகினி

Wednesday, September 07, 2005

முகம் காட்டு


முகம் காட்டு



வெள்ளி நிலவே முகம் காட்டு

வீசும் தென்றலே நான் சேர.....

வழி சொல்லு.


என் விழிகள் உனை தேடும்போது....

சில நிமிடம் தடைபோடுகின்றது

எனதுள்ளம்.


வஞ்சமில்லா நெஞ்சை ஊமை
மொழிபேச வைத்தபோது...

என் கண்கள் தடை இன்றி

நீர் பெருகின்றது.


இறைவணிடம் உயிரைக்கொடுக்க

முயன்றேன்
மறுகணம் உன் உயிருடன் கலக்க

ஏங்குகின்றேன்

உன் இதழின் அழகை சிரிப்பில்

கண்டேன்

உன் பெயரை ஏட்டினில்

எழிதிக்கொண்டேன்

விழிகள் மூட மறுக்கின்றது

உன் நினைவு பசியை

மறைக்கின்றது

ஓடும் நதியல் உன் முகம்

பார்த்தேன்

அள்ளிப்பருகையில் நீ.....தவறியது

ஏனோ.....?

உனை இதயத்தில் சுமந்ததால்....

நான் வறண்டகுளத்தில்

வாடியதாமரை யானேன்

நீ பக்கம் வந்தால் போதும்

உனக்கு நான் செந்தாமரையாவேன்

rakini..

தாய்

தாய்


தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு

உனை எடுத்தாள்.

மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை

பாலாக்கினாள்.

இரவுகலை பகலாக்கி முத்துப்போல்

வளர்த்தெடுத்தாள்.

தாய் வேறு சேய் வேறு ஆனாலும;

தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.

நீ…..யும் தாயானாள் அப்போ……

புரியும் தாய்ப்பாசம்.

என் அருகில் வாராயோ

என் அருகில் வாராயோ...


அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.

இதயத்தை உன்னிடம் கொடுத்த போது

தினம் கனவிலும் உனை தேடுனேன்.

அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.

உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்

இதயம் கால்களை நிறுத்துதடி

இருவிழியும் உனை பார்க்கும் போது

உன் உயிருடன் கலக்க விரும்புதடி.

எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.


மீண்டும் தேடும் சுகம்




மீண்டும் தேடும் சுகம்

முற்றத்து மல்லிகையின்மூக்கைத் துழைக்கும் வாசனை

மண்ணில் என் பிஞ்சுக் காலின் சின்னச் சுவடுகள்

தத்தி நடக்கையில் சலங்கையின் சத்தங்கள்

சின்னக் குரலால் சங்கீத ஸ்வரங்கள்

நந்தவனத்துக்குள் சலனமில்லா மனங்கள்

அன்னையின் மடியில் சுதந்திரத் தூக்கம்

தந்தையின் கரத்தால் செல்ல அடிகள்

தூரத்தில் மணி ஓசை கேட்டிட

ஐஸ் பழத்துக்காய் அடம் பிடிக்கும் வயது.

ஐம்பது சதத்திற்க்காய் அப்பாவின் கையில் செல்ல முத்தம்.

சண்டை பிடித்து உணவு உண்ண அண்ணாவைத் தேடும் விழிகள்

அம்மாவின் பேச்சோடுசைக்கில் சுற்றுலா....

பள்ளிப் பருவத்தில்துள்ளித் திரிந்த காலங்கள்

புத்தகத்தின் நடுவினில் குட்டி போடும் மயிலிறகு.

புயலோடு விழுந்த மரத்தில்களவாடும் புளியங்காய்.

வயிற்றுக்குள் வலி தேடி கள்ளம் போடும் நாளில்உள்ளங்கை சிவக்க வைக்கும்வாத்தியாரின் பிரம்பு.

பிரியாவிடை கொடுத்துவிடைபெறும் பள்ளிக் கூடத்தில்கண்ணீர்த் துளியுடன் கைகாட்டும் நண்பர்கள்

இத்தனையும் தேடும் போது நெஞ்சுக்குள் ஓர் சுகம்

சுகத்துக்குள் ஓர் சோகம்..

எனக்குள் ஓர் முகம்


எனக்குள் ஓர் முகம்

நீயும் நானும் பேசும் போது
மனதில் இன்ப ஊஞ்சல் கண்டேன்.

நீயும் நானும் சந்தித்தபோது

உள்ளத்தில் ஓர் உணர்வு கண்டேன்.

நீ..சொல்லும் வேதம் கேட்டு

உன்னுள் ஓர் ஆசை கொண்டேன்.

நீ..நடந்த பாதை எல்லாம்

பூச்செடிகள் நட்டுவைத்தேன்.
நீ.....குளித்த நீர் எடுத்து பூச்செடியை

பூக்க வைத்தேன்.

அதில் உன் முகம் பார்த்தபோது

வண்டு உனை தீண்டாமல் வலை
போட்டு மூடிவைத்தேன்.

உதிர்ந்துள்ள பூக்களில் அடிவைத்து

நடக்கையில்அதில் பொற்க்காலம்
ஒன்றைக்கண்டேன்.

உன் மனதை நோகாது நான் காக்க
என் மனதை கல்லாக்கிக்கொண்டேன்.

கண்ணிர்த்துளியோடு என்

ஆசையையும் புதைத்து விட்டு...
உன் முகம் மட்டும்போதும் போதும்

என ஓரமாய் ஒதுங்கி விட்டன்.

------ ------ ------

ராகினியின் மேலும் பல கவிதைகளைப் படிக்க கீழ்வரும் தலைப்புகளில் சொடுக்குங்கள்.


1.ராகினியின் கவிதை முத்துக்கள்.

2.ராகினியின் கவி மலர்கள்

3.ராகினியின் கவிதை தென்றல்


------ ------ -------

தொடுப்புகள் [ LINKS ]

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்


நிலா எப்.எம்